வெள்ளவத்தை பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பின் ஆறாவது மாடியிலிருந்து 61 வயதான தமிழ் வயோதிப பெண் ஒருவர் கீழே பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவத்தில் செல்வரட்ணம் செல்வராணி என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் மேலும் கூறுகையில் வெள்ளவத்தை 37 ஆவது ஒழுங்கையிலுள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றின் 6 ஆவது மாடியிலிருந்து கீழே குதித்தே மேற்படி பெண் தற்கொலை செய்துள்ளார். அத்துடன் அவர் தமிழில் கடிதம் ஒன்றினையும் எழுதி வைத்துள்ளார்.
தனக்கு பார்வைக்கோளாறு உட்பட பல நோய்கள் இருப்பதாகவும் அதனால் தான் தனது குடும்பத்திற்குப் பாராமாக இருக்க விரும்பாததால் தற்கொலை செய்து கொள்வதாகவும் கடிதத்தில் எழுதி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திங்கள், 6 செப்டம்பர், 2010
மாடியிலிருந்து குதித்து தமிழ் வயோதிப மாது தற்கொலை!!!
AM 10:28
No comments
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 commentaires:
கருத்துரையிடுக