கிளிநொச்சியில் அமைந்துள்ள- போரினால் தாய் தந்தையினரை இழந்த பிள்ளைகளை வைத்துப்பராமரிக்கும் மகாதேவாஆச்சிரமத்தில் 08-07-2013 திங்கட்கிழமை அன்று -மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா (பாக்கியம்)அவர்களின் 31ம் நாள் நினைவுதினத்தை முன்னிட்டு-அன்னாரின் குடும்பத்தினரின் நிதிப்பங்களிப்புடன்-அல்லையூர் இணையத்தின் அனுசரணையில் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்கள் நேரடியாகச் சென்று -ஆச்சிரமத்தில் நடைபெற்ற அமரர் திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா அவர்களின் பிரார்த்தனை நிகழ்விலும் அதனைத் தொடர்ந்து சிறப்பு அன்னதான நிகழ்விலும் கலந்து கொண்டார்.இந்த ஆச்சிரமத்தில் சுமார் 350 சிறுவர் சிறுமிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு அல்லையூர் இணையத்தின் அனுசரணையில் நடைபெற்ற,நான்காவது நிகழ்வாகும்.