திங்கள், 13 செப்டம்பர், 2010

தினம் ஒரு தகவல்

பணம் பற்றி உலக அறிஞர்கள் கூறுவது: 
  • ஹென்றிக் இப்சன்


    • பணத்தால் உணவை வாங்கலாம்; ஆனால் பசியை வாங்க முடியாது.
    • பணத்தால் தொடர்புகளைப் பெறலாம்; ஆனால் நண்பர்களைப் பெற முடியாது.
    • பணத்தால் வேலையாட்களைப் பெறலாம்; ஆனால் விசுவாசத்தைப் பெற முடியாது.
    • பணத்தால் பலநாள் சந்தோஷத்தைப் பெறலாம்; ஆனால் அமைதியை, இன்பத்தை பெற முடியாது.  
  • ஆண்ட்ரோ மாராயிஸ் – பணத்தையோ வெற்றியையோ பேராசையோடு தேடுவதால் துக்கம்தான் ஏற்படும். ஏனெனில் அப்படிப்பட்ட வாழ்க்கை தங்களுக்கு வெளியே உள்ளவற்றைச் சார்ந்திருக்கச் செய்கிறது.
  • எட்வர்ட் பாக் – மனிதனால் உணவை உண்டு மட்டுமே வாழ்ந்துவிட முடியாது. பணத்தைச் சம்பாதிப்பது, அதன் மூலம் அதிகாரத்தைச் சேர்ப்பதால் வாழ்விற்கு பயனில்லை. வாழ்வு இவற்றை விட மேலானது. இந்த உண்மையை அறியாதவற்கள், அடுத்தவா்களுக்கு சேவை புரிவதால் கிடைக்கும் மாபெரும் சந்தோஷம், திருப்த்தியை அடையமாட்டார்கள்.
  • ஜார்ஜ் ஹோரேஸ் லாரிபர் – பணத்தையும் பணத்தால் வாங்கக்கூடிய பொருட்களையும் பெற்றிருப்பது நல்லதுதான். ஆனால் அவ்வப்போது பரிசோதித்துப் பார்த்து பணத்தால் பெற முடியாதவற்றை நீங்கள் இழந்துவிடவில்லை என்று நிச்சயம் செய்து கொள்வதும் நலமே!!!

0 commentaires:

கருத்துரையிடுக