திங்கள், 13 செப்டம்பர், 2010

மனம் தளராது கல்வியோடு போராடி வென்ற நம்மூர்மருத்துவர் சசிகுமார்

அல்லைப்பிட்டி இளம் மருத்துவர்
திரு மன்மதராசன் சசிகுமார்

உங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்யுங்கள்
ஒன்பது சகோதரங்களில் ஒருவராகப் பிறந்து
உறுதியோடு கல்வியைக்கற்றுவிரைவில்ஒருமருத்துவராக வெளியேறப் போகும் 28 வயதுநம்மூர் இளைஞனின் கதை!
எம்மூரில் தோன்றியுள்ள இளம் மருத்துவரை,தெரிந்துகொள்ள அல்லையூர்
இணையம் அவரோடு தொடர்பினை ஏற்படுத்தியது.
நாம் தொடர்பு கொண்ட
போது .யாழ் போதனா வைத்தியசாலையில் பயிற்சி நெறியில் இருந்த அவர்
பயிற்சி முடிந்ததும் எம்மோடு தொடர்பினை ஏற்படுத்தினார்.நாம் எம்மை
அறிமுகப்படுத்திக் கொண்டபோது,மிகவும் மகிழ்ச்சியடைந்த அவர் எம்மோடு
கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
இனி அல்லைப்பிட்டி கிராமத்தில் உருவாகியுள்ள இளம் மருத்துவர் கூறுவதைக்கேளுங்கள்.நான் அல்லைப்பிட்டி கிராமத்தில் 29/09/1983 அன்று திரு இளையதம்பி மன்மதராசன்-பரமேஸ்வரி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தேன்.என்னோடுகூடப்பிறந்தவர்கள் எட்டுச்சகோதரங்கள்!நான் ஆரம்ப கல்வியை அல்லைபராசக்தி வித்தியாசாலையிலும், உயர்கல்வியை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திலும்,தொடர்ந்து மருத்துவப்படிப்பை,யாழ் பல்கலைக் கழகத்திலும்,தற்போது பயற்சிநெறியின் படிப்பை யாழ் போதனா வைத்தியசாலையிலும்,மேற்கொண்டு வருகிறேன்.மேலும் எட்டு மாதங்கள் பயிற்சி நெறிமுடிந்தவுடன்,மருத்துவர் வேலையில் சேரமுடியும். என்றும்,கூறினார்.
அல்லைப்பிட்டி மக்களுக்கு வைத்தியம் பார்ப்பீர்களா?என்ற எமது கேள்விக்கு
தாம் பிறந்த கிராமத்திற்கு சேவைசெய்வதே! தமது குறிக்கோள் என்றும்
கூறினார்.
 ஒன்பது சகோதரங்களுடன் பிறந்து வறுமையிலும் உறுதிதளராது கல்வியைக் கற்று 28 வயதில் மருத்துவராக வெளியேறும் அவரை அல்லைப்பிட்டி மக்கள்
சார்பிலும் அல்லையூர் இணையம் சார்பிலும் வாழ்த்தி நிக்கின்றோம்.

18 commentaires:

  1. அல்லைப்பிட்டிக்கு கிடைத்த பொக்கிசம் மருத்துவர்
    சசிக்குமார் அவரை மனதார வாழ்த்துகின்றோம்
    அவரின் மருத்துவப்பணிகளில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என்று மனதார
    வாழ்த்துகின்றோம்.

    பதிலளிநீக்கு
  2. Nalladu enadu manam nerainda vahldukkal
    aththodu avarin pathilkalum mananeraivai tharukinradu nanri

    பதிலளிநீக்கு
  3. Thuvarakan said From allaipiddy
    I wish all the best Dr. sasi anna ...
    we are also allaipiddy people sothat we will become a education & good allaipiddy very soon.
    i want Thanks allaiyoor.com
    Thank you so much allaiyoor.com
    ...............Thuvarakan.. From allaipiddy

    பதிலளிநீக்கு
  4. மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கும் அல்லையூர் வரதன்.

    பதிலளிநீக்கு
  5. உனது ஊருக்கும், உறவுகளுக்கும், புகழ்படைத்தாய் நண்பனே!
    உன்னால் தலைநிமிர்கிறது நம் அல்லையூர்.
    உன்னை சபைதனில் ஏற்றிவைத்த பெற்றோர் வாழ்க.
    உன் எதிர்காலம் சிறக்கவும், நீ, சாதனைகள் படைக்கவும் வாழ்த்துக்கள்!

    மிக்க அன்புடன்
    இ.சொ.லிங்கதாசன் & பிருந்தா
    டென்மார்க்.

    பதிலளிநீக்கு
  6. தி.பரஞ்சோதிநாதன்4 செப்டம்பர், 2010 அன்று PM 11:39

    எமது உளமார்ந்த வாழ்த்துக்கள்.
    தி.பரஞ்சோதிநாதன் குடும்பத்தினர்.
    டென்மார்க்.

    பதிலளிநீக்கு
  7. தம்பி சசி இன்னுமின்னும் சாதனை படைக்க எனது வழ்த்துகள்......உங்கள் உயர்ச்சியீ எம்சமுதாயத்தின் வளர்ச்சி.......குணேஸ்

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    காலத்தால் துரத்தபட்டோம்! கையுறவுகளை சிதறவிட்டோம்!
    கலங்கி நின்றிடாது, கையிறுக்க காகிதத்தை உன்னுயிராய்
    காப்பாற்றி, காலத்தை வென்றவனாய் காட்சி தரும் அல்லையூர் தேர் ஆனாய்,
    தேரின் ஒளிவீச்சு ஒளிரட்டும் ஈழம்மெங்கும்,
    வாழ்க பல்லாண்டு வளர்க உன்தொண்டு
    வாழ்த்துக்கள் உனக்குண்டு!!!
    நன்றி
    அன்புடன் த.அருச்சுணன்

    பதிலளிநீக்கு
  9. Peyar solla oru pillai vendum enpar.
    nee peranai piranthu perumai thanthu viddai.
    Valka un pukal valarka un pany.

    valthum
    kala aunty family
    Germany

    பதிலளிநீக்கு
  10. dr.sasigkumar menmelum,palathuraikalil valara vaalthugal

    பதிலளிநீக்கு
  11. Mr.T.ARUCHUNANIN VAALDU MADALIL EVALAU ARTHTHANKAL NIRAINDU IRUKKINRADU ARUMAY
    VAALDUKKAL
    A.PARAN

    பதிலளிநீக்கு
  12. அல்லை மண்ணின் மைந்தனே ! உன் இவ் வளச்சியைக் கண்டு நான் மிகவும் பூரிப்படைகிறேன். உன் சேவை எம் மக்களுக்கும், மண்ணுக்கும் தேவை. இன்னும் இன்னும் உன் துறையில் வளர்ந்து பல சாதனைகள் புரிய என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். என்றும் உங்கள்
    அன்பு
    நண்பன்
    சஞ்சீவன்(அல்லைப்பிட்டி)

    பதிலளிநீக்கு
  13. மருத்துவர் சசிக்குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரது சிறந்த சேவை எல்லோருக்கும் கிடைக்க வாழ்த்துக்கள்-Ruban

    பதிலளிநீக்கு
  14. DR.SASIKUMAR GOD BLESS YOU.YOUR KNOWLEDGE FOR YOUR PEOPLE GOOD JOB.GRACE BE WITH YOU.-RAVI ARIYARATNAM.

    பதிலளிநீக்கு