ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தென்னாசியாவின் பருமனான மரம்! (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

அரேபியர் காலத்துக்கு உரித்தானதாக மன்னார் மாவட்டத்தின் பள்ளிமுனை கிராமத்தின் பிரதான வீதியின் அருகில் அமைந்துள்ள பெருக்க மரம் தென்னிலங்கையில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் மன்னாருக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது.
Biobab என்பது இதன் பெயர். இப்பெருக்க மரம் தென்னாசியாவிலேயே மிகப் பெரிய சுற்றளவை உடையது. மிகவும் பிரமாண்டமானதாக மட்டுமன்றி அழகான தோற்றத்திலும் காணப்படுகிறது.
இதனால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள்
இதை வந்து பார்த்து விட்டு செல்கின்றனர். இம்மரத்தின் அகலச் சுற்றளவு 19 .5 மீற்றர் ஆகவும்,நீளம் 7.5 மீற்றர் ஆகவும் காணப்படுகிறது.

இம் மரத்தை மன்னார் பள்ளிமுனை புனித லூசியா ஆலய நிர்வாகத்தினர் பராமரித்து வருகின்றனர்.

0 commentaires:

கருத்துரையிடுக