செவ்வாய், 7 செப்டம்பர், 2010

தனக்குத்தானே தீமூட்டி 4வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை


உடலில் எரியும் தீயுடன்
 
 மாடியில் இருந்த குதித்து
 
 உயிர் விட்ட பெண்: 
 
 குடும்ப தகராறில் விபரீதம்புளியந்தோப்பு பார்வதி கக்கன் காலனியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (32). பாத்திரம் தயாரிக்கும் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி காமாட்சி (27).
 
இவர்கள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள வீட்டில் குடியிருந்தனர். சீனிவாசன் வேலைக்கு செல்வது இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும்.
 
சில தினங்களாக சீனிவாசன் வேலைக்குச் செல்லாததால், வீட்டுச் செலவுக்கு பணம் கொடுக்கவில்லை. இதனால் கணவன்- மனைவி இடையே நேற்று இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டது.
 
இதில் ஆத்திரம் அடைந்த காமாட்சி நேற்று இரவு 11 மணி அளவில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். பின்னர் 4-வது மாடியில் இருந்து அலறி துடித்தபடி கீழே குதித்தார்.
 
உடனே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து, காமாட்சியை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை 
பலன் இல்லாமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
 
புளியந்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
குடும்பத் தகராறில் எரியும் தீயுடன் பெண் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புளியந்தோப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 commentaires:

கருத்துரையிடுக