செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

தூக்கில் தொங்கிய மனைவி! வட்டக்கச்சியில் சம்பவம்



போதையில் மனைவியை துன்புறுத்திய கணவன்; தூக்கில் தொங்கினார் மனைவி! வட்டக்கச்சியில் சம்பவம்


நன்றாகக் குடித்துவிட்டு மது போதையில் வீடு வந்த கணவன் அன்றைய தினம் உணவு தயாரிக்க தாமதமாகியதால் மனைவியை அடித்து துன்புறுத்தினார்.


இதனையடுத்து ஆத்திரமும் விரக்தியுமுற்ற ஒரு பிள்ளையின் தாயான இளம் மனைவி கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


இந்தப் பரிதாபச் சம்பவம் கிளிநொச்சி மாவட்டம், வட்டகச்சி மாயவனூர் கிராமத்தில் கடந்த சனிக்கிழமையன்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஜெகதீபன் தயந்தினி (வயது 21) என்பவரே இவ்வாறு இறந்துள்ளார்
.

இறந்தவரது மரண விசாரணையை கிளிநொச்சி திடீர் மரண விசாரணை அதிகாரி டாக்டர் கே. திருலோகமூர்த்தி கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்து மேற்கொண்டார். இரேத பரிசோதனையை வைத்திய அதிகாரி டாக்டர் இரத்தினம் சிவானந்தன் நடாத்தினார்.

மரணமான பெண்ணின் கணவர் பாலசுப்பிரமணியம் ஜெகதீபன் (வயது 26) தாயார் திருமதி தேவராசா செல்வராணி (வயது 47) மாமியான பாலசுப்பிரமணியம் பாலேஸ்வரி (வயது 59) ஆகியோர் மரண விசாரணையின்போது சாட்சியமளித்தனர். மரண விசாரணை அதிகாரியினால் தற்கொலை மரணம் என தீர்ப்பு வழங்கப்பட்டது

0 commentaires:

கருத்துரையிடுக