சனி, 28 ஆகஸ்ட், 2010

இளம்பெண்களின் மார்பழகைப் பார்த்து பணத்தை கோட்டைவிட்ட தமிழர்!

பாரீஸ் : பிரான்சில் ஏ.டி.எம்., மில் பணம் எடுத்துக் கொண்டிருந்த நபரிடம்,  இரண்டு இளம் பெண்கள் தங்கள் மார்பழகைக் காட்டி,  அவரது கவனத்தைத் திசை திருப்பி 18 ஆயிரம் ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரீசில், "லெப்ட் பேங்க்' என்ற பகுதியில் , உள்ள ஏ.டி.எம்., நிலையத்தில் ஒரு தமிழர் பணம் எடுப்பதற்காக ரகசிய எண்ணைப் பதிவு செய்து கொண்டிருந்த போது, 20 வயதுடைய இரு இளம் பெண்கள், அவரருகில் தங்கள் மார்பழகைக் காட்டியவாறு வந்து நின்றனர். கவர்ச்சியில் மயங்கிய அந்த நபர், ஒரு பெண்ணை உற்றுப் பார்த்துக்  கொண்டிருந்த போது, மற்றொரு பெண், அவரது வங்கிக் கணக்கிலிருந்து 18 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு ஓடி விட்டாள்.



இக்காட்சிகள் ஏ.டி.எம்., நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.,கேமராவில் பதிவாகியுள்ளன. இதுகுறித்து அப்பகுதி போலீசார் கூறுகையில்,  "அந்தப் பெண் யார்  என்று அடையாளம் தெரியவில்லை. ஒருவர் பணம் எடுத்துக் கொண்டிருக்கும்போது அவர் அருகில் நிற்பவர், கவனத்தைத் திசை திருப்பும் படியான செயல்களில் ஈடுபட்டாலும், பணம் எடுப்பவர் தன் கவனத்தைச் சிதற விடக் கூடாது என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்த உள்ளோம்' என்று தெரிவித்தனர்

0 commentaires:

கருத்துரையிடுக