நல்லவர் அருளம்பலம் நாடிநின்ற திருப் பணியே!
வல்ல அறங்காவலரின் வரிசையிலே முதல்வராய்ப்
பல்லாண்டு காலமாய்ப் பாடுபட்டு உழைத்திட்டார்.
முக்கால் நூற்றாண்டு முருகபணி ஆற்றியவர்
இக்காலம் இறைவனுடன் இரண்டறக் கலந்துவிட்டார்.
தற்கால ஆலயப் பரிபாலன சபையினர் நாம்
பொற்கால மனிதருக்குச் சூட்டுகின்றோம்
அஞ்சலிகள்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல இறைவனைப் பிரார்திக்கின்றோம்.
அல்லைப்பிட்டி கறண்டப்பாய் ஸ்ரீமுருகன் ஆலய
பரிபாலன சபை
0 commentaires:
கருத்துரையிடுக