செவ்வாய், 20 ஜூலை, 2010

அல்லைப்பிட்டியில் சிரமதான பணிகள் முன்னெடுப்பு!!!


அல்லைப்பிட்டி கிராமத்தில் உள்ள அனைத்து வீதிகள் பொது இடங்கள் அனைத்தையும் துப்பரவு செய்யும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வேலணை உதவி அரசாங்க பணிமனை ஊடான நிவாரண கொடுப்பனவுகளுக்காக அல்லைப்பிட்டி கிராமசேவையாளர் திரு சின்னதுரை
இரத்தினேஸ்வரன் அவர்களின் நேரடி மேற்பார்வையில் சிரமதான பணிகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட சிரமதானபணிகளில் மக்கள் ஆர்வமுடன் கலந்து
கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.300க்கும் அதிகமான குடும்பத்தைச்சேர்ந்த தலா ஒருவர்வீதம் இந்த சிரமதானபணிகளில் கலந்து
கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஊதியமாக உலர்உணவுப்பொருட்கள் வழங்கப்படவுள்ளன.

                                  

0 commentaires:

கருத்துரையிடுக